Switch to
   
   
   
செய்தி
சர்வாதிகார ஆட்சியுள் நுழையும் இலங்கை: கனடியத் தமிழர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:32.34 AM GMT +05:30 ]
இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

இத்துடன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளையும் தடைகளையும் மேற்கொள்ளுமாறு கனடியத் தமிழர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

குறிப்பாக அதிகரிக்கும் அடக்குமுறை அதிகாரப் பிடிக்குள் சிக்குண்டு இலங்கையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் தொடர்பாக கனடியத் தமிழர்கள் கவலை கொண்டுள்ளனர். போர்க் குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் எந்தவொரு குழுவிற்கும் சாட்சியங்களை அளிப்பதற்குத் தான் தயாராக உள்ளதாக அறிவித்த பின்னர் பொன்சேகாவின் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “எந்தவொரு விசாரணைகளிற்குச் செல்லவும் சாட்சி வழங்கவும் நான் தயாராக உள்ளேன்… யாரும் போர்க்குற்றங்களைப் புரிந்திருந்தால் அவர்கள் எவரையும் நான் காப்பாற்றப் போவதில்லை. யாரும் போர்குற்றம் புரிந்திருந்தால் அவர்களைப் பாதுகாப்பதானது தேசவிரோதமாகும்”

“சரத் பொன்சேகாவினது கைதானது தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கமானது எவ்வகையான அடக்கு முறைகளையும் பிரயோகிக்கத் தயாராக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது,” இவ்வாறு கனடியத் தமிழர் பேரவையின் தேசிய பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இக்கைது நடவடிக்கையானது, இலங்கை எவ்வளவு விரைவாக பர்மா மற்றும் ஈரான் போன்று அடக்குமுறை அதிகாரமையமாக மாறுகின்றது என்பதனைக் காட்டுகிறது.

“சர்வதேச சமூகத்தினது மென்போக்கான இராஜதந்திர நடவடிக்கையானது இலங்கை அரசினது ஜனநாயகப் பண்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் அதிகரிப்பின் மூலம் முற்றுமுழுதாகத் தோல்வியடைந்துள்ளது” இவ்வாறு பூபாலபிள்ளை தெரிவித்தார். “இன்றைய இலங்கையானது, மனித உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் எதிர்க்கட்சிகளைச் சார்ந்தோர் கொலைப் பயமுறுத்தல்களை எதிர்நோக்குதல், காணாமல் போதல் அல்லது சிறைப்பிடிக்கப்படுதல் போன்றவை நடைபெறுகின்ற ஆர்வெலியன் போன்று உள்ளது. முனித உரிமைகள் எனும் விடயம் வரும் போது சதாம் உசைன் மற்றும் ஸ்லொபடோன் மெலோசவிக் போன்றவர்களின் வரிசையில் ராஜபக்சவும் சேருகின்றார்.

சர்வதேச சமூகமானது உண்மையில் இலங்கையில் ஜனநாயம், ஒற்றுமை மற்றும் மனிதஉரிமைகள் ஆகியவற்றைக் காண விரும்பினால், அவர்கள் மிக முக்கியமாக பொருளாதார மற்றும் இராஜதந்திரத் தடைகளையும் இலங்கை மீது விதிப்பதனைக் கருத்தில் எடுக்கவேண்டும். சிம்பாப்பே நட்டினை பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் இருந்த வெளியேற்றியது போல் இலங்கையினையும் வெளியேற்றுவதற்குக் கனடா போன்ற பொதுநலவாய நாடுகள் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement