Switch to
செய்திகள் 2010-02-07
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43 PM]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்களை உரிமையாளர்கள் ஆவணங்களை காண்பித்து திரும்பப் பெறலாம்: யாழ். ஆயர்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 05:03 PM]

வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு  விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம், அப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். [மேலும்]

(2ம் இணைப்பு)
ஜனாதிபதி நாடு திரும்பியதும் நாடாளுமன்றம் நாளை நள்ளிரவு கலைக்கப்படும்?
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:14 PM]
ரஷ்யாவிற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர், குறிப்பாக நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க உள்வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
சரத் பொன்சேகாவை கைது செய்வதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொள்ளவில்லை: கோத்தபாய
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:06 PM]
சரத் பொன்சேகாவை கைது செய்வதற்கான முயற்சிகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31 AM]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க திரைமறைவில் சதி திட்டம்: வினோ நோகராதலிங்கம் பா.உ.
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 08:34 AM]
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச் செய்து , நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவு குறைக்கும் நடவடிக்கைகளில் திரைமறைவுச் சதி ஒன்று தீட்டப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கையின் இராணுவப் பேச்சாளராக மீண்டும் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நியமனம்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 06:29 AM]

பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இலங்கையின் இராணுவப் பேச்சாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை திங்கட்கிழமை முதல் இராணுவப் பேச்சாளருக்கான கடமையை  பொறுப்பேற்கவுள்ளார். [மேலும்]

சுதந்திரத் தனி தமிழீழம் பற்றிய வாக்கெடுப்பு – 99.33 % ஆம் எனப் பதில்”: தமிழ் தேசிய சபை நன்றி தெரிவிப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 05:05 AM] []
பெரிய பிரித்தானியாவில், ஒர் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தவும் அத்துடன் பெரிய பிரித்தானியாவில் அரசியல், இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய சபை அமைக்கப்பட்டது. த.தே.சபை நடுவராக கடமையாற்றிய இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு முயற்சியை வெற்றியுடன் நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் த.தே.சபை தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.
[மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26 AM]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஈ.பி.டி.பி., சுதந்திர கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:23 AM]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து ஈ.பி.டி.பி கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டு பிரஜைகள் நாடுகடத்தப்படவுள்ளனர்: அரசாங்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:18 AM]
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யும் நபர்களை உடனடியாக நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51 AM] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
கொழும்பு மாவட்ட வேட்பாளர் தெரிவில் ஐதேகவிற்கும் தமது கட்சிக்கும் இடையில் முரண்பாடா? : மனோ கணேசன் எம்.பி. விளக்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:37 AM]
ஜனநாயக மக்கள் முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கொழும்பு மாவட்ட பொதுத்தோ்தல் வேட்பாளர் நியமனங்களை பங்கிட்டுக்கொள்வதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகாவை தடுத்து வைக்க அரசு முயற்சி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:11 AM]
இலங்கையின் இராணுவ நீதிமன்றம், முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சித்து வருவதாகவும், அவரைத் தடுத்து வைத்து செயற்படாமல் இருக்க செய்வதே அரசாங்கத்தின் முயற்சியாக உள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. [மேலும்]
லசந்தவின் படுகொலை: குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கைதான சந்தேகநபருக்கு அழுத்தம்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:01 AM]
சண்டேலீடர் செய்திதாளின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, பிரிகேடியர் டி கெப்பிட்டிவெலனவை, குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்]
பொதுத்தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பதில் சர்ச்சை
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:56 AM]
இலங்கையில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பில்  சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உலகில் வாழும் தமிழர்கள் தம்மை பாதுகாக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் சிங்கப்பூர் பிரதிநிதி
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:43 AM]
உலகத்தமிழர்கள் தம்மை எவரும் தொடுவதற்கு அனுமதிக்க முடியாதவாறு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். சென்னையில் நேற்று ஆரம்பமான உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிவகாமிதேவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.  [மேலும்]
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு பக்கசார்பானது: இலங்கை அரசாங்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:33 AM]
ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டாவை ரத்துசசெய்ய எடுத்த தீர்மானமானது ஒருபக்க சார்பானது. அவ்வாறு மேற்கொள்வது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளமுடியாதது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. [மேலும்]
யாழ். - காங்கேசன் வீதி விஸ்தரிப்பு: வரும் 10ம் திகதி தீர்க்கமான முடிவு என்கிறார் ஆளுநர்
[ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:24 AM]
யாழ். நகரில் இருந்து காங்கேசன்துறை வரையான பிரதான வீதி (கே.கே.எஸ். வீதி) விஸ்தரிப்புத் தொடர்பாக எதிர்வரும் 10ம் திகதி சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
[மேலும்]
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement